காஷ்மீருக்கு நகர்த்தப்படும் 25,000 வீரர்கள்- காரணம் என்ன ?
காஷ்மிருக்கு 25,000 துணை இராணுவப்படை வீரர்கள் அனுப்பப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கான காரணம் பெரிதாக வெளியிடப்படவில்லை எனினும் பாதுகாப்புக்காக இத்தனை பெரிய படை அனுப்பப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக சுமார் 10000 வீரர்கள் அனுப்பப்பட்டு தற்போது மேலதிக படைகள் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளன.கிட்டத்தட்ட 25000க்கும் மேற்பட்ட துணை இராணுவப்படையினர் காஷ்மீருக்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.
அனுப்பப்படும் வீரர்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.