புயலில் சிக்கிய ஜப்பான்; உதவிக்கு கிளம்பிய இந்திய கடற்படை போர்க்கப்பல்கள்
ஹஜிபிஸ் என்ற புயலால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு உதவ இந்திய கடற்படை தனது சயாத்ரி மற்றும் கில்டன் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது.
நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்திய போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஹஜிபிஸ் புயலால் ஜப்பான் பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.
சயாத்திரி ஒரு ஸ்டீல்த் பிரைகேட் கப்பல் ஆகும்.கில்டன் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஆகும்.எதிரி படைகளை வீழ்த்த உருவாக்கப்பட்ட இந்த போர்க்கப்பல்கள் தற்போது மனிதாபிமான உதவிகளுக்காக ஜப்பான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.