Breaking News

ஈரான்,இரஷ்யா,சீனா இணைந்து இந்தியப் பெருங்கடலில் கடற்போர் பயிற்சி மேற்கொள்ள திட்டம்

ஈரான்,இரஷ்யா,சீனா இணைந்து இந்தியப் பெருங்கடலில் கடற்போர் பயிற்சி மேற்கொள்ள திட்டம்

ஈரானிய கடற்படை கமாண்டர் புதன் அன்று வெளியிட்ட தகவல்படி விரைவில் ஈரான்,இரஷ்யா,சீனா இணைந்து இந்தியப் பெருங்கடலில் கடற்போர் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பயற்சி எந்த தேதிகளில் நடைபெறும் என்பது குறித்த தகவல்களை அவர் கூறவில்லை.
இந்தியாவினன தெற்கு பகுதியில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் இந்த பயிற்சி இந்த வருட இறுதியில் நடைபெறும் என்ற தகவலை அவர் கூறியுள்ளார்.

பயிற்சி தொடர்பான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக இரானிய கமாண்டர் தெரிவித்துள்ளார்.

இரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் அவர்கள் அக்டோபர் 2 அன்று கூறும் போது விரைவில் சீனா மற்றும் இரஷ்யா பயங்கரவாத தடுப்பு மற்றும் கடற்கொள்ளை எதிர்ப்பு குறித்த போர்பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.